ஜப்பானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : ஃபுகுஷிமா அணுஉலைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை
May 22 2022 12:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளின் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி பகல் 12.24 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இபராக்கி மாகாணத்திற்கு அப்பால் பசிபிக் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவில் 5 புள்ளி 8-ஆக பதிவானதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்நிலநடுக்கம், ஃபுகுஷிமா மாகாணங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், நிலநடுக்கத்தால் ஃபுகுஷிமா அணுஉலைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும், சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.