வெடித்துச் சிதறும் இத்தாலி நாட்டின் எட்னா எரிமலை : ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு
May 23 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியில் உள்ள Etna எரிமலை வெடித்துச் சிதறி, நெருப்பு குழம்பை வெளியேற்றி வருவதால், சுற்றுவட்டார மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி நாட்டில் உள்ள சிசிலி நகரில் அமைந்துள்ள Etna எரிமலை, ஐரோப்பிய கண்டத்தில் மூன்றுவது பெரிய எரிமலையாக திகழ்கிறது. கடந்த காலங்களில் இந்த எரிமலை பலமுறை வெடித்துள்ளது. மேலும், இது புகழ்பெற்ற சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது.
இந்நிலையில், எட்னா எரிமலை கடந்த மாத இறுதியில் வெடிக்க தொடங்கிய நிலையில், தற்போது 'லாவா' எனப்படும் நெருப்புக் குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. இதன் சுற்றுப்புறத்தில் உள்ள ஊர் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இரவு நேரங்களில் எரிமலையில் இருந்து நெருப்பு ஜுவாலைகள் வெடித்துக் கிளம்புவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இன்னும் சில நாட்கள் எரிமலை வெடிப்பு அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.