கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் உயிரிழப்பு : பல லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி
May 23 2022 12:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனடாவை உலுக்கிய கடும் புயலுக்கு 4 பேர் உயிரிழந்த நிலையில், பல லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.
கனடாவின் கிழக்கு மாகாணங்களான Ontario மற்றும் Quebec மாகாணங்களில் கடுமையான புயல் தாக்கியது. மேலும், இடி மின்னலுடன் பலத்த மழையும் பெய்ததால்,பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் இருளில் தவித்தனர். புயல், மழை தொடர்பான விபத்துகளில் 4 பேர் பலியான நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அந்நாட்டு அரசு முடுக்கிவிட்டுள்ளது.