ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேரரசர் நருஹிட்டோவுடன் சந்திப்பு - இம்பீரியல் அரண்மனையில் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை

May 23 2022 1:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் பேரரசர் நருஹிட்டோவை இம்பீரியல் அரண்மனையில் சந்தித்துப் பேசினார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் 3-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நாளை நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க ஜப்பான் தலைநகர் டோக்கியோ வந்த ஜோ பைடனுக்கு அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். இதையடுத்து, இம்பீரியல் அரண்மனைக்கு சென்ற ஜோ பைடன் அந்நாட்டின் பேரரசர் நருஹிட்டோவை சந்தித்து பேசினார். பின்னர் அகாசாகா அரண்மனையில் ஜப்பானியப் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஜப்பானின் ராணுவத் திறன்களை விரிவுபடுத்துவது, அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களைப் பற்றி அவர்கள் விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோ பைடனின் ஜப்பான் வருகை இந்தோபசிபிக் பிராந்தியத்தில் முக்கிய கவனத்தை பெற்றுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஆசிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00