ஆஸ்திரேலியாவின் 31 வது பிரதமராக பொறுப்பேற்றார் அந்தோனி அல்பானீஸ் : முதல் நிகழ்வாக குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
May 23 2022 1:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் பதவியேற்றுக் கொண்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை 47-வது பொதுத் தேர்தல் நடைபெற்றது. 151 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில், அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி அதிக இடங்களில் வென்றது. மேலும், சுயேச்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் உதவியுடன் அக்கட்சி ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து, புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனாவுடனான உறவு கடினமான ஒன்றாக இருக்கும் என்றார். ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய அரசாங்கம் காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் உலகத்துடன் நாம் கையாளும் விதத்தில் மாற்றத்தை பிரதிபலிக்கும் ஒரு அரசாங்கம் என அல்பானீஸ் பேசினார். இதனிடையே, டோக்கியோவில் நடைபெறும் குவாட் சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் அவர் புறப்பட்டுச் சென்றார்.