நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு நியமான தேர்தல் நடத்தக் கோரிக்கை : தலைநகர் இஸ்லாமாத் பேரணியில் பங்கேற்க இம்ரான் கான் அழைப்பு
May 23 2022 2:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, நியமான தேர்தல் நடத்தக்கோரி தலைநகர் இஸ்லாமாத்தில் பேரணி நடத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த மாதம் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்தஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து, பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. தீர்மானத்தில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து, ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஊடக மாநாட்டில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நாடாளுமன்றம் கலைத்து சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை வரும் 25-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேரணி நடைபெறும் என அறிவித்தார். அப்போது, அவர் பொதுமக்கள், தன் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.