குரங்கு அம்மை நோய் தொடர்ந்து பரவும் வாய்ப்பு அதிகம் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 23 2022 3:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குரங்கு அம்மை நோய் தொடர்ந்து பரவும் வாய்ப்பு அதிக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை ஆப்பிரிக்காவைத் தாண்டி உலகெங்கும் உள்ள 15 நாடுகளில் பரவியுள்ளதாகவும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் 100 பேருக்கு இதுவரை இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் இந்த மங்கிபாக்ஸ் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது எனக் குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, இந்த நோய் மேலும் பரவுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் குறைவாகவே காணப்படுவதாகாவும், நோய் பாதித்தவர்கள் 21 நாட்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.