ஃபிலிப்பைன்ஸில் நடுகடலில், படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - மேலும் 23 பேர் மருத்துவமனையில் அனுமதி - 120 பேர் மீட்பு
May 23 2022 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிலிபைன்ஸில் தலைநகர் மணிலாவில் இருந்து கியூசான் சென்ற படகில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிலிபைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள கியூசான் மாகாணத்தில் உள்ள ரியல் துறைமுகத்தை சென்ற படகில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதில், 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாகவும், 23 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும், 120 பயணிகள் பத்திரமாக மீட்டக்கப்பட்டதாக தெரிவித்துள்ள கடலோர காவல்படை, தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என கூறியுள்ளது.