இலங்கையில் 8 புதிய அமைச்சர்களுக்கு பதவியேற்றனர் : அதிபர் கோத்தபய ராஜபட்சே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
May 23 2022 5:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையில் புதிதாக பதவியேற்ற 8 புதிய அமைச்சர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கொழும்பிலுள்ள அதிபர் மாளிகையில் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது. 8 புதிய அமைச்சர்கள், அதிபர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்துகொண்டனர். இதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது. புதிய அமைச்சர்களாக பதவியேற்ற திரு. மஹிந்த அமரவீரவுக்கு விவசாயத்துறை, வனவிலங்கு, மற்றும் வனத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்பந்துல குணவர்தனவுக்கு ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கெஹெலிய ரம்புக்வெலவுக்கு நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத்துறை வழங்கபட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடல் தொழில்துறையும், அமைச்சர்
ரமேஷ் பத்திரணவுக்கு தொழில்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க கடந்த 12ம் தேதி பதவி பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து, முதல் கட்டமாக கடந்த 14ம் தேதி 4 அமைச்சர்களும், கடந்த 20ம் தேதி மேலும் 9 அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.