உக்ரைனுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்ட ரஷ்ய ராணுவ வீரருக்கு வாழ்நாள் சிறை - கீவ் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

May 24 2022 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

உக்ரைனுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்ட ரஷ்ய ராணுவ வீரருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கி கீவ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஷ்யா, உக்ரைன் போரின் போது, 21 வயதான ரஷ்ய ராணுவ வீரர் Vadim Shishimarin என்பவர், Chupakhivka நகரில் 62 வயதான முதியவரை சட்டவிதிகளை மீறி சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கீவ் நீதிமன்றத்தில் இதுதொடர்பான விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ரஷ்ய ராணுவ வீரர், மேலிட உத்தரவின் பேரில் பொதுமக்களை தாக்கியதாக தெரிவித்தார். மேலும் தனக்கான தண்டனையை ஏற்றுக் கொள்வதாகவும், முதியவரை சுட்டுக் கொன்றத்திற்காக மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில், போர் குற்றங்களில் ஈடுபட்ட ரஷ்ய ராணுவ வீரர் Vadim Shishimarin-க்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து கீவ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரஷ்யா-உக்ரைன் போரின் முதலாவது போர்க்குற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00