ஸ்பெயினில் நடுக்கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய திமிங்கலம் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய கடலோர மீட்பு படை
May 25 2022 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயினில் நடுக்கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய திமிங்கலத்தை கடலோர மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.
ஸ்பெயினில் உள்ள Balearic தீவில் கடலோர மீட்பு படையினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் 12 அடி நீளமுள்ள கூம்பு திமிங்கலம் ஒன்று மீனவர்களின் மிதவை வலையில் சிக்கி உயிருக்கு போராடியது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக கடலில் இறங்கிய மீட்பு படையினர், திமிங்கலத்தின் மீது சுற்றியிருந்த வலையை அறுத்து அதனை காப்பாற்றினர். இதுதொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாகி பரவி வருகிறது.