ஜெர்மனியில் தீவிரமடைந்த குரங்கு அம்மை நோய் பாதிப்பு - பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 40 ஆயிரம் தடுப்பூசி டோஸ்களை கொள்முதல் செய்ய முடிவு
May 25 2022 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெர்மனியில் குரங்கு அம்மை நோய் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 40 ஆயிரம் Bavarian Nordic தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய், தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. ஜெர்மனியிலும் குரங்கு அம்மை நோய் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில், குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் Bavarian Nordic தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. பெரியம்மை நோய்க்கான மருந்து தற்போது குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.