இனப்பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டுமே இலங்கை பொருளாதாரத்தை மீட்க முடியும் - இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சென்னையில் பேட்டி
May 26 2022 6:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இனப்பிரச்னைக்கு தீர்வு கண்டால் மட்டுமே இலங்கை பொருளாதாரத்தை மீட்க முடியும் என, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழ் மக்களை கொல்வதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்றும், அதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மாண்புமிகு அம்மா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டார்.