செனகல் நாட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து : தீயில் கருகி 11 பச்சிளம் குழந்தைகள் பலி
May 26 2022 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செனகல் நாட்டில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள திவாவோன் நகர அரசு பொது மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. பச்சிளம் குழந்தைகளுக்கான வார்டில் பற்றிய தீ, சில நிமிடங்களிலேயே மற்ற இடங்களுக்கும் பரவியது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்துக்கான காரணம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த தீ விபத்தில் 11 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு செனகல் அதிபர் மேக்கி சால் இரங்கல் தெரிவித்துள்ளார்.