அமெரிக்காவில் பள்ளியில் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்திய இளைஞர் - உயிரிழந்தோருக்கு பொதுமக்கள் அஞ்சலி
May 26 2022 4:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் பள்ளிக்குழந்தைகள் 19 பேர் உள்ளிட்ட 21 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் டெக்சாஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், புதிதாக வாங்கிய துப்பாக்கியால் தனது பாட்டியைச் சுட்டுக்கொன்று விட்டு, ஒரு பள்ளிக்குள் நுழைந்து குழந்தைகளையும் துப்பாக்கியால் சுட்டார். இதில் 19 குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ள இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெக்சாஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமான பொதுமக்கள், உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, தங்களது சோகத்தையும் வெளிப்படுத்தினர்.