சீனாவில் பெய்யும் கனமழையால் 6 மாகாணங்களில் பயங்கர வெள்ளப்பெருக்கு - தெற்கு சீனாவில் கனமழை தொடரும் என எச்சரிக்கை

Jun 22 2022 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 6 மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெற்கு சீனாவில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அம்மாகாண அரசுகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த 4 நாட்களாக கொட்டிவரும் மிக பலத்த மழை காரணமாக, ஆறுகள், கிளை நதிகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டு, பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 6 மாகாணங்களின் கரையோரத்தில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், ரயில் தண்டவாளங்களும் அடித்துச் செல்லப்பட்டன. பல நகரங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனிடையே மீட்பு பணிக்‍கு சென்ற தீயணைப்பு வாகனத்தையே வெள்ளம் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்‍கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தெற்கு சீனாவில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தெற்கு மாகாண அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00