சீனாவில் பெய்யும் கனமழையால் 6 மாகாணங்களில் பயங்கர வெள்ளப்பெருக்கு - தெற்கு சீனாவில் கனமழை தொடரும் என எச்சரிக்கை
Jun 22 2022 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 6 மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தெற்கு சீனாவில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அம்மாகாண அரசுகள் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.
சீனாவின் தெற்கு பகுதியில் கடந்த 4 நாட்களாக கொட்டிவரும் மிக பலத்த மழை காரணமாக, ஆறுகள், கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 6 மாகாணங்களின் கரையோரத்தில் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கரைபுரண்டோடும் வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், ரயில் தண்டவாளங்களும் அடித்துச் செல்லப்பட்டன. பல நகரங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனிடையே மீட்பு பணிக்கு சென்ற தீயணைப்பு வாகனத்தையே வெள்ளம் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும், சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தெற்கு சீனாவில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தெற்கு மாகாண அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.