ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950-ஆக உயர்வு; மீட்பு பணிகள் தீவிரம்

Jun 22 2022 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆப்கானிஸ்தான் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950-ஆக அதிகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 950-ஆக அதிகரித்துள்ளது. பக்டிகா மாகாணத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். கோஸ்ட், பக்டிகா மாகாணங்களில் பல கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. ஆப்கானிஸ்தான் தலிபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பலவும் அந்த நாட்டை விட்டு வெளியேறிவிட்டன. இதனால், மீட்பு பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. பக்டிகா மாகாணங்களில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள், ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இதனிடையே மீட்புப் பணிகளில் உதவுமாறு உலக நாடுகளுக்கு தலீபான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00