அப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது - படுகாயம் அடைந்த ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Jun 23 2022 10:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

அப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. படுகாயம் அடைந்த ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.

அப்கானிஸ்தானில் நேற்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரிலிருந்து சுமார் 44 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்‍கத்தால் கோஸ்ட், பக்டிகா மாகாணங்களில் பல கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், ஆயிரத்து 500-க்‍கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பக்டிகா மாகாணத்தில்தான் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்‍கப்பட்டு உள்ளனர். இதனிடையே மீட்புப் பணிகளில் உதவுமாறு உலக நாடுகளுக்கு தலீபான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00