ரயில்வே ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் - தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயங்குவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
Jun 23 2022 8:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயில்வே ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. போரிஸ் ஜான்சனுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் Keir Starmer-க்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
இங்கிலாந்தில் அதிகரித்து வரும் செலவினங்களை ஈடு செய்யும் விதமாக தங்களின் ஊதியத்தில் 11 சதவீதம் உயர்த்திதர வேண்டும் என ரெயில்வே ஊழியர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் இங்கிலாந்து முழுவதும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்தநிலையில், ரயில்வே ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு, ரயில்வே ஊழியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் Keir Starmer குற்றம்சாட்டினார்.