உலகளவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Jun 30 2022 8:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகளவில் குரங்கு அம்மையினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
உலக அளவில் இதுவரை 3 ஆயிரத்து 413 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஐரோப்பிய பிராந்தியத்தில் 2 ஆயிரத்து 933 பாதிப்பு பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பிரிட்டனில் ஆயிரத்து 76 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், நைஜீரியா நாட்டில் இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புதிதாக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தத் தொற்று பரவி உள்ளதாகவும், வரும் நாள்களில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.