இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டம் - தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றதால் பரபரப்பு
Jul 1 2022 8:26AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ள இலங்கையில், உணவுப் பொருள், மருந்துகள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் பல அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான பஞ்சம் நிலவுகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், போராட்டங்களும் நாளுக்கு நாள் வேறுபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மோசமான பொருளாதார நெருக்கடிக்கு கோட்டபய ராஜபக்சே பொறுப்பேற்க வலியுறுத்தி அதிபர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர்.