ஜப்பானில் கடும் வெயில் கொளுத்தும் நிலையில் மின் பற்றாக்குறை - அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மின் விளக்குகளைப் பயன்படுத்துவதில் சிக்கல்
Jul 1 2022 8:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானில் கடுமையான வெயில் கொளுத்தும் நிலையில், வழக்கத்துக்கு மாறான மின் பற்றாக்குறையில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் அதீத கால மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வழக்கத்துக்கு மாறான வெப்பநிலை, சூறாவளி மற்றும் பலத்த மழை போன்ற பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புக்கள் ஏற்பட்டு வரும் நிலையில் ஜப்பானில் கடந்த சில நாட்களாக 147 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகிவருகிறது. இதனால் மின் பயன்பாடு அதிகரித்து கடும் மின்பற்றாக்குறை நிலவுகிறது. தலைநகர் டோக்கியோல் அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்களில் மின் விளக்குகளைப் பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து அலுவலகங்களிலும் விளக்குகளை அணைத்து வைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.