சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா - பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர்
Jul 1 2022 8:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவான Disneyland 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
சீனாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் உள்ள மிகப்பெரிய பொழுதுபோக்கு பூங்காவான Disneyland மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் கடந்த 3 மாதங்களாக வீடுகளிலேயே முடங்கிக்கிடந்த பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் தங்களுக்கு பிடித்த உணவுகளை வாங்கி விரும்பி சாப்பிட்டனர். இருப்பினும் பூங்காவுக்குள் நுழைவதற்கு முன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் என்றும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என்றும் Disneyland நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஷாங்காய் நகரில் அருங்காட்சியகங்கள் இன்றுமுதல் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.