நியூயார்க் நகரப் பூங்காவில் அபரிமிதமாக வளர்ந்துள்ள செடிகள் : களைக்கொல்லிகளுக்குப் பதிலாக ஆடுகள் மூலம் அழிக்க முயற்சி
Jul 1 2022 8:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் நியூயார்க் நகரப் பூங்கா ஒன்றில் அதிக அளவில் வளர்ந்திருக்கும் களைகளை வேதிப் பொருட்களைக் கொண்டு அழிக்காமல், ஆடுகளைக் கொண்டு அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியூயார்க் நகரத்தின் ஆற்றோரம் உள்ள பூங்கா ஒன்றில் ஏராளமான செடி- கொடிகள் வளர்ந்துள்ளன. இவற்றை வழக்கமாக வேதிப் பொருட்களைக் கொண்டு அழிக்கும் பூங்கா நிர்வாகம் இம்முறை ஆடுகளைக் கொண்டு அவற்றை அகற்ற முடிவெடுத்தது. இதற்காக பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வரவழைத்து பூங்காவுக்குள் விடப்பட்டுள்ளன. இந்த ஆடுகள் பூங்காவுக்குள் வந்தவுடன் அங்குள்ள இலை- தழைகளை வேகமாக உண்ணத் தொடங்கியுள்ளன. இது போன்ற புதிய முயற்சி பயனுள்ளதாக அமைந்தால் பிற பூங்காக்களும் இம் முயற்சிகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.