ஜப்பானில் தொடர்ந்து சீறும் மிகப்பெரிய சக்ரஜிமா எரிமலை : நெருப்பை வெளியேற்றுவதால் பொதுமக்கள் அச்சம்
Jul 25 2022 2:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு மிகப்பெரிய எரிமலை தொடர்ந்து நெருப்பை வெளியேற்றுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் புகழ்பெற்ற சக்ரஜிமா எரிமலை தொடர்ந்து நெருப்பு குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் தொடர்ந்து உஷார்படுத்தப்பட்டு வருகின்றனர். எரிமலை சீற்றம் அதிகமாக இருப்பதால், 5ம் நிலை என்ற அளவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை சீற்றம் காரணமாக அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.