குரங்கம்மையை ஒழிக்க ஒருங்கிணைந்த செயல்பாடு : அனைத்து நாடுகளுக்கும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்
Jul 30 2022 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குரங்கம்மையை ஒழிப்பதில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு நாடுகளில் குரங்கம்மை பரவி வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பு மருத்துவ அவசரநிலையைப் பிரகடனம் செய்தது. இந்நிலையில், கொரோனா வைரசை ஒழிப்பதில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதைப் போலவே குரங்கம்மையை ஒழிக்கவும் எல்லோரும் முயற்சி மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, குரங்கம்மை குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் இந்நோய் பாதிப்பைத் தடுக்க முடியும் என்றும் மருத்துவத் துறையினர் அறிவித்துள்ளனர். மேலும், காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.