கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவின் கென்டகி மாகாணம் - 4 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு
Aug 1 2022 10:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் உள்ள கென்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஒகியோ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் ஊருக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் 4 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய ஏராளமானோர்மூ ஹெலிகாப்டர்கள் லம் பத்திரமாக மீட்கப்பட்டனர். தற்போது அங்கு வெள்ளம் வடிந்து வருவதால், சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.