சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்த கோட்டாபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரமல்ல - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கருத்து
Aug 2 2022 7:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சே நாடு திரும்ப இது சரியான நேரமல்ல என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி அவர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். விசா காலம் முடிவதால், அவர் விரைவில் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் அதிபர் கோட்டாபய நாடு திரும்ப இது உகந்த நேரம் அல்ல என்றும், அவ்வாறு நாடு திரும்பினால் இலங்கையில் அரசியல் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும்
என தெரிவித்துள்ளார்.