உயர் அதிகாரிகளுடன் சென்று திடீரென மாயமான ராணுவ ஹெலிகாப்டர் - பாகிஸ்தானில் தேடும் பணி தீவிரம்
Aug 2 2022 7:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் உயர் அதிகாரிகளுடன் சென்று திடீரென மாயமான ராணுவ ஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் லாஸ்பெல்லாவிலிருந்து சில உயர் அதிகாரிகளுடன் ராணுவ
ஹெலிகாப்டர் புறப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் உதவ சென்ற இந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென மாயமானது. சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் ஹெலிகாப்டர் இருக்குமிடத்திற்கான சிக்னல் கிடைக்கவில்லை.
ஹெலிகாப்டரில் கமாண்டர் உள்பட 6 வீரர்கள் பயணித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.