இலங்கை அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் 4 மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டம்- இன்று மாலைக்குள் வெளியேறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டக்காரர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
Aug 5 2022 8:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் 4 மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபடுவோர் இன்று மாலைக்குள் வெளியேறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார சிக்கல் எழுந்ததால் உணவு மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்தது. அரசின் தவறான நிதி நிர்வாகம் காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்ததால் அப்போதைய அதிபர் கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமராக இருந்த மஹிந்தா ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலக கோரி தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களில் நுழைந்து சூறையாடினர். பொதுமக்கள் போராட்டத்தால் வேறு வழியின்றி முந்தைய அரசு பதவி விலகியது. புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், காலி முகத்திடலில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. வெளியேறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது.