இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான வான்வழித் தாக்குதல் 4வது நாளாக நீடிப்பதால் பதற்றம் - பொதுமக்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்
Aug 8 2022 8:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான வான்வழித் தாக்குதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா முனையின் மையப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அண்மையில் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து காசா முனைப்பகுதியில் இருந்து பாலஸ்தீனமும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான வான்வழி தாக்குதல் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் காசாவில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.