போர்ப்பயிற்சியின் மூலம் சீனா பதற்றத்தை அதிகரித்து வருகிறது - அமெரிக்கா குற்றச்சாட்டு
Aug 8 2022 11:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போர்ப்பயிற்சியின் மூலம் சீனா பதற்றத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றது சீனாவை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. இதனால் மிரட்டும் விதமாக தைவானை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் சீன ராணுவம் கடந்த 4-ந்தேதி போர்ப்பயிற்சியை தொடங்கியது. சீனாவின் இந்த போர்ப்பயிற்சி தங்கள் மீதான தாக்குதலுக்கான ஒத்திகையாக அமைந்துள்ளதாக தைவான் குற்றம் சாட்டியதோடு, போர்ப்பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் சீனாவை வலியுறுத்தியுள்ளது.