கோத்தபய ராஜபக்ஷ தாய்லாந்தில் தஞ்சமடைய முடிவு என வெளியான தகவலுக்கு மறுப்பு- அடைக்கலம் கோரவில்லை என தாய்லாந்து அரசு விளக்கம்
Aug 11 2022 7:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ஷ, தாய்லாந்து நாட்டில் தஞ்சமடைய முடிவெடுத்திருப்பதாக வெளியான தகவல்களுக்கு அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிபருக்கு எதிராக பொதுமக்கள் பெரும் புரட்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்ஷ, சிங்கப்பூர் நாட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார். சில வாரங்கள் கழித்து அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவார் என கூறப்பட்ட நிலையில், அவர் தாய்லாந்தில் தஞ்சமடையப் போகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தாய்லாந்து அரசு, தங்கள் நாட்டில் தஞ்சம் அடைய கோத்தபய ராஜபக்ஷ அடைக்கலம் கோரவில்லை என விளக்கம் அளித்துள்ளது.