ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மியான்மர் ராணுவ நீதிமன்றம் உத்தரவு
Aug 16 2022 7:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆங் சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நோபல் பரிசு பெற்ற 77 வயதான ஆங் சான் சூகி, மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்தவர். இவர் ஊழல் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் என குறைந்தது 18 குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.சூகி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
ஆங் சான் சூகி தேர்தலில் நிற்க தடை விதிக்கவே ராணுவ அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.