அர்மேனியாவில் சந்தையில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் பலி - படுகாயத்துடன் ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதி
Aug 16 2022 7:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அர்மேனியாவில் சந்தையில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த பலரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அர்மேனியா நாட்டின் தலைநகர் Yerevan-யில் உள்ள சந்தையில் நேற்று மாலை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சென்ற மீட்புக் குழுவினர், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் சந்தையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த ஏராளமான கட்டடங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. குண்டுவெடிப்புக்கான காரணம் மற்றும் இதன் பின்னனி குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அர்மேனியா காவல்துறை தெரிவித்துள்ளது.