இலங்கைக்கு Dornier 228 சிறிய வகை போர் விமானத்தை வழங்கிய இந்தியா - இருநாட்டின் நட்புறவு, பரஸ்பர ஒத்துழைப்பு மேலும் வளருமென நம்பிக்கை
Aug 16 2022 7:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், அந்நாட்டு கடற்படைக்கு டோர்னியர் விமானம் ஒன்றை இந்தியா பரிசளித்துள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக இலங்கை அரசியலில் பெரும் குழப்பங்கள் நீடித்த நிலையில் தற்போது அவற்றிற்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீன உளவுக் கப்பல் ஒன்றை நிறுத்திவைக்க இலங்கை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து இந்தியா தனது அச்சத்தை வெளிப்படுத்தியது. இந்த நிலையில், இலங்கை கடற்படையின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக டோர்னியர் விமானம் ஒன்றையும், பல்வேறு ராணுவத்தளவாடங்களையும் பரிசாக இந்தியா அளித்துள்ளது. இதனால் இந்தியாவுடனான இலங்கையின் நட்புறவு மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.