உலக நாடுகளில் அமைதியை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சி : ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் கண்டனம்
Aug 16 2022 5:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக நாடுகளில் அமைதியை சீர்குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் விமர்சித்துள்ளார்.
ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருவதாக குற்றம்சாட்டினார். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் பயணத்தை தனது உரையில் குறிப்பிட்ட புதின், இது ஒரு தனிப்பட்ட, பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணமென விமர்சித்தார். உலக நாடுகளில் மோதல் நடைபெறும் பகுதிகளில் போரை நீட்டிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் கண்டனம் தெரிவித்தார். உக்ரைனை தொடர்ந்து ஆசியா, அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளிலும் அமைதியை சீர்குலைத்து, குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயல்வதாக ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் குற்றம்சாட்டினார்.