மனிதர்களிடம் இருந்து குரங்கு அம்மை நோய் முதல் முறையாக நாய்க்கு பரவியது கண்டுபிடிப்பு - செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Aug 18 2022 7:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக நாடுகளை அச்சுறுத்திவரும் குரங்கு அம்மை நோய், முதல் முறையாக மனிதர்களிடம் இருந்து நாய்க்கு பரவியது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் தற்போது பரவி உள்ளது. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, மனிதர்களிடம் இருந்து முதல் முறையாக நாய்க்கு குரங்கு அம்மை பரவியது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பாரிஸில் வாழும் ஒரு நபரிடம் இருந்து அவரது செல்லப்பிராணி நாய்க்கு குரங்கு அம்மை பரவியது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.