தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே - அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல்
Aug 18 2022 7:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்தன. இதையடுத்து, கடந்த மாதம் ராணுவ விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு சென்றார். அங்கிருந்து சிங்கப்பூருக்கும் பின்னர் தாய்லாந்திற்கும் சென்று தஞ்சமடைந்தார். இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.