பிரான்ஸ் நாட்டில் 5 நாட்களாக காட்டில் பரவும் மோசமான தீ : ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடமாற்றம்
Sep 17 2022 5:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரான்ஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள சவுமாஸ் பகுதியில் கடந்த 12ம் தேதி பற்றிய காட்டுத் தீ வேகமாகப் பரவிவருகிறது. 11 தீ அணைப்பு விமானங்களுடன் ஆயிரக்கணக்கான வீரர்கள் போராடினாலும், மோசமான வானிலை காரணமாக கட்டுக்கடங்காமல் தீ பரவுவதால் ஏற்கெனவே சுமார் 500 பேர் வீடுகளைவிட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மேலும் 500 பேரை வனத்துறையினர் இடமாற்றம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை பிரான்சில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட காடுகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. பருவநிலை மாற்றமே இது போன்ற பேரழிவுகளுக்குக் காரணம் என கருதப்படுகிறது.