எலிசபெத் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் - புதிதாக யாரும் வரவேண்டாம் என வேண்டுகோள்
Sep 18 2022 12:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் வைக்கப்பட்டுள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில், அவரது பேரக்குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த 8-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத் உடலுக்கு அவரது பேரக்குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர்.
உள்ளூர் நேரப்படி நாளை காலை 6.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்றும், அதன் பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ராணியின் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மானுவல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.