இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் இந்திய குடியசு தலைவர் திரௌபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு
Sep 18 2022 4:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்வதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி நாளை காலை 6.30 மணி வரை இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்றும், அதன் பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ராணியின் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த இறுதிச்சடங்கில் உலகத்தலைவர்கள் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இறுதிச்சடங்கிற்காக இங்கிலாந்து அரசு சுமார் 72 கோடி ரூபாய் செலவிடுவதாக கூறப்படுகிறது.