ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க ஓராண்டாக நீடிக்கும் தடை - பெண்கள் கல்வியை இழந்துள்ளது வெட்கக்கேடானது என ஐ.நா கண்டனம்
Sep 19 2022 6:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க ஓராண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு ஐ.நா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதை தொடர்ந்து அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை விதித்து தலீபான்கள் உத்தரவு பிறப்பித்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு ஆண்டாக அங்கு பெண்கள் மேல்நிலை கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தலீபான்களை வலியுறுத்தியுள்ளது. பெண்கள் கல்வி கற்க முடியாமல் போன கடந்த ஓராண்டானது, ஒரு சோகமான, வெட்கக்கேடான ஒரு ஆண்டுவிழா என்று ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.