அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு - கொரோனா இறப்பு எண்ணிக்கை பெரிதும் குறைந்துவிட்டதாக தகவல்
Sep 19 2022 11:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் தெரிவித்தது. கொரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வருவதுபோல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஆனால் கொரோனாவால் சில பிரச்சனைகள் உள்ளதாகவும், அதனை ஒழிக்க தொடர்ந்து தனது அரசு பணியாற்றி வருவதாகவும் கூறினார்.