வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் 7 புள்ளி 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்
Sep 20 2022 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வட அமெரிக்கா நாடான மெக்சிகோவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
நிலநடுக்கம் ரிக்டர் அளவு 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:05 மணிக்கு ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்கோகன் மாகாணத்தின் எல்லைக்கு அருகில் 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டிடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை குலுங்கின.
நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யுஎஸ்ஜிஎஸ் படி, நிலநடுக்கம் அக்விலா நகருக்கு தென் கிழக்கே சுமார் 37 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 15.1 கிலோமீட்டர் (9 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே முதலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் பின்னர் திரும்ப பெறப்பட்டது.