ஐ.நா. சபையின் அடிப்படைக் கொள்கைகளை மீறிவிட்டது ரஷ்யா - ஐ.நா. பொதுச் சபையில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குற்றச்சாட்டு
Sep 22 2022 7:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உக்ரைன் மீதான போர் மூலம் ஐ.நா. சபையின் அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா மீறியுள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் பொது அமா்வில் பேசிய அதிபா் பைடன், அமெரிக்க பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா, அதன் அண்டை நாட்டில் ஊடுருவி, வரைபடத்திலிருந்து உக்ரைனை அழிக்க முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார். ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள உலக நாடுகள் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உக்ரைனில் போரிட 3 லட்சம் ரிசா்வ் வீரா்களுக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளதையும், உக்ரைனின் கிழக்கு, தெற்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதையும் பைடன் கடுமையாக விமா்சித்தார்.