இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான வெளிநாடுகளில் உள்ள ஈரான் பெண்கள் போராட்டம்
Sep 22 2022 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள ஈரான் பெண்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க தற்போதைய அதிபர் இப்ராகிம் ரைசி, ஹிஜாப் போலீஸ் என்ற தனிப்படையை உருவாக்கி உள்ளார். ஹிஜாப்பை சரியாக அணியாத பெண்களை இந்த போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அண்மையில், குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை, சரியாக ஹிஜாப் அணியாததால் போலீசார் கைது செய்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், காவலர்கள் தாக்கியதில், தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் ஈரான் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஈரான் அரசுக்கு எதிராகவும், ஹிஜாபுக்கு எதிராகவும் அங்குள்ள பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள ஈரான் பெண்களும், தாங்கள் வசிக்கும் நாடுகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரான் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பெண்கள் தமது தலைமுடியை வெட்டிக் கொண்ட காட்சிகள் வெளியாகிவுள்ளன.
இஸ்லாமிய நாடான ஈரானில், ஹிஜாபுக்கு எதிராக வலுத்துள்ள பெண்களின் போராட்டம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.