ஹண்டூராஸ் நாட்டில் மண்சரிவின் போது மண்ணுடன் சேர்ந்து பேருந்தும் சரிந்த காட்சிகள் : ஏற்கெனவே நிலத்தில் பிளவு இருந்ததால் மண்சரிவு ஏற்பட்டதாக தகவல்
Sep 24 2022 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹண்டூராஸ் நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது அங்கே நின்றுகொண்டிருந்த பேருந்தும் அதளபாதாளத்தில் விழுந்தது. இது குறித்த காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹண்டூராஸ் நாட்டின் CUCUYAGUA (குகுயாகுவா)ஒரு மலைகிராமத்தில் பழுதான பேருந்து ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு சாலை அப்படியே சரிந்தது. அப்போது அந்தச் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்தும் அதளபாதாளத்தில் விழுந்தது. இது குறித்துப் பேசிய உள்ளூர்வாசிகள், நிலப்பகுதியில் ஏற்கெனவே ஒரு பிளவு ஏற்பட்டிருந்ததாகவும், அதையடுத்த பகுதிகள் தற்போதைய மண் சரிவில் அப்படியே கீழே விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த போது அங்கிருந்த நபர் ஒருவர் தமது செல்ஃபோனில் பதிவு செய்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.