நியூயார்க்கில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸ் சந்திப்பு
Sep 25 2022 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரஸை சந்தித்தார்.
ஐ.நா. பொதுச்சபையின் 77வது அமர்வு கூட்டம் நடைபெறும் நிலையில், இந்த சந்திப்பு நடந்தது. அப்போது இருவரும் உக்ரைன் போர் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து பேசினார்கள். பின்னர் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஜெய்சங்கர், ஐ.நா. சீர்திருத்தம், ஜி-20 உச்சிமாநாடு, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.