ஆஃப்கானிஸ்தானில் தேர்வு மையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் - 30 பேர் உயிரிழப்பு; காயமடைந்த 11 பேருக்‍கு மருத்துவமனையில் சிகிச்சை

Oct 1 2022 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஃப்கானிஸ்தானில் தேர்வு மையம் ஒன்றில் நடந்த தற்கொலைத் தாக்‍குதலில் 30 பேர் உயிரிழந்தனர், காயமடைந்த 11 பேருக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.

தலைநகர் காபூலின் தெற்கு பகுதியில் வசித்துவரும் ஷியா பிரிவு சிறுபான்மை மக்‍களைக்‍ குறிவைத்து இத்தாக்‍குதல் நடத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வு எழுதிக்‍கொண்டிருந்த போது திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதையடுத்து அப்பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் அங்கு வசித்து வரும் பொதுமக்‍கள் தெரிவித்தனர். இது ஒரு தற்கொலைத் தாக்‍குதல் எனத்தெரிவித்துள்ள போலீசார், இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் முகமது அலி ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு சிகிச்சை அளிக்‍கப்படும் நிலையில், படுகாயமடைந்த மேலும் சிலர் உயிரிழக்‍கும் ஆபத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00